தங்களது ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தே தீருவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.
தங்களின் ராணுவ தளபதியை கொன்றதற்காக, அமெரிக்கா நிச்சயம் ஃபீல் பண்ணியே தீரணும். அந்த அளவுக்கு தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று ஈரான் சபதமிட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்காவுடன் ராணுவ போரை விரும்பவில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக் ராணுவம் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் உள்ளிட்ட ஏழு பேரும் கொல்லப்பட்டனர்.